[file image]
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே நிறுத்தப்பட்ட லாரி மீது மினி வேன் மோதி 3 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது, அகமதாபாத் அருகே பவ்லா-பகோதரா நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில், பஞ்சர் காரணமாக சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மினி டிரக் மோதியதில், கேடா கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் என 10 பேர் உயிரிழந்தனர்.
அகமதாபாத் நோக்கிச் சென்ற மினி வேனில் மொத்தம் 23 பேர் பயணம் செய்தனர், அதில் மூன்று குழந்தைகள் உள்பட 10 பேர் இறந்த நிலையில், இரண்டு பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். இதுகுறித்து அகமதாபாத் ரூரல் எஸ்பி அமித் கூறுகையில், பாவ்லா-பகோதரா நெடுஞ்சாலையில் மினி லாரி மற்றொரு லாரி மீது மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் 5 பெண்கள், 2 ஆண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. RTO மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆகியவையும் இதில் ஈடுபட்டுள்ளன. அகமதாபாத்தில் இருந்து 70 கிமீ தொலைவில் பவ்லா-பகோதரா நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
இந்த விபத்தை அடுத்து பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள பாவ்லா – பகோதரா நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்து வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாவும் கூறியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்றும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…