அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா விமானத்தை இயக்கியவர் யார்?

விமானத்தில் பயணம் செய்தவர்கள் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டவர்கள் என ஏர் இந்தியா தகவல் தெரிவித்துள்ளது.

planecrash

குஜராத் : அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா கேம்ப் மற்றும் ஐ.ஜி.பி. காம்பவுண்ட் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியா கொடுத்த தகவலின் படி, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் செல்லும் AI171 விமானம் இன்று புறப்பட்ட பிறகு விபத்தில் சிக்கியதை  உறுதிப்படுத்தியிருந்தது. மொத்தமாக 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர் எனவும் இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டவர்கள் எனவும் விளக்கம் அளித்திருந்தது.

இயக்கியது யார்?

விபத்துக்குள்ளான இந்த விமானத்தை இயக்கியது கேப்டன் சுமீத் சபர்வால் தான். இவர் மிகவும் ஒரு மிகவும் அனுபவமிக்க விமானி ஆவார், ஏர் இந்தியாவின் அகமதாபாத்-லண்டன் காட்விக் விமானமான AI-171ஐ இயக்கியவர். அதே சமயம், இவருக்கு 8,200 மணிநேர விமான பயண அனுபவம் உள்ளது. அது மட்டுமில்லை,  ஒரு லைன் ட்ரெயினிங் கேப்டன் (Line Training Captain – LTC) ஆகவும் இருந்திருக்கிறார். இவருடன் விமானத்தில் முதல் அதிகாரியாக (First Officer) கிளைவ் குண்டர் (Clive Kundar) இருந்தார், இவருக்கு 1,100 மணிநேர விமான அனுபவம் உள்ளது.

மேலும், விபத்து நடப்பதற்கு முன்பு, ஏர் இந்தியா விமானம் AI-171-ஐ இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வால் மற்றும் முதல் அதிகாரி கிளைவ் குண்டர் ஆகியோர் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு (Air Traffic Control – ATC) ஒரு  (MAYDAY) அவசர அழைப்பை (distress call) செய்தனர். இந்த அழைப்பு விமானத்தில் உடனடி ஆபத்து இருப்பதைக் குறிக்கும் சர்வதேச அவசர கால அழைப்பு பறவைகள் எதுவும் விமானம் மீது மோதினாலோ அல்லது தொழில்நுட்ப கோளாறு எதுவும் ஏற்பட்டது என்றாலோ உடனடியாக இதன் மூலம் இயக்குனர் தகவலை தெரிவிப்பார். அவர் தகவல் தெரிவித்து அடுத்த சில நிமிடங்களில் விமானம் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விமானம் குறித்து 

அதே போல போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஒரு நவீன, நீண்ட தூர பயண விமானமாகும். இது ஏர் இந்தியாவின் AI-171 விமானமாக (ரெஜிஸ்ட்ரேஷன்: VT-ANB) அகமதாபாத்திலிருந்து லண்டன் காட்விக்கிற்கு பயன்படுத்தப்பட்டது. இந்த விமானத்தில் பயணிகளுக்கு வசதியான கேபின், பெரிய ஜன்னல்கள், குறைந்த சத்தம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. உதாரணமாக, விமானிகளுக்கு தெளிவான பார்வை தரும் Synthetic Vision System மற்றும் மின்னணு கட்டுப்பாட்டு Fly-by-Wire தொழில்நுட்பம் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது.

இது இந்த விமான மாடலின் முதல் பெரிய விபத்து. இதற்கு முன், இந்த விமானம் 50 லட்சம் பயணங்களையும், 1 பில்லியன் பயணிகளையும் பாதுகாப்பாக கொண்டு சென்றது. 2013-ல் பேட்டரி தீ சிக்கல் இருந்தாலும், அது சரி செய்யப்பட்டது. எனவே, விமானமும் பாதுகாப்பான விமானமாக கூறப்பட்டது போல அதனை இயக்கிய இயக்குனரும் சிறப்பாக செயல்பட்டவராக இருந்தாலும் இன்று விபத்து ஏற்பட என்ன காரணம் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது. மேலும், விபத்து குறித்து விசாரணையை தொடங்க சம்பவ இடத்திற்கு புலனாய்வு பிரிவு சென்று விசாரணையை தொடங்கியுள்ளது. விசாரணை முடிந்த பிறகு என்ன காரணத்துக்காக விபத்து ஏற்பட்டது என்பது பற்றிய விளக்கம் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்