ஏர் இந்தியா விமானம் மும்மடங்கு கட்டணம் வசூலிப்பதாக இணையத்தில் வெளியான வைரல் வீடியோ.
விமான சேவை வழங்கும் நிறுவன அதிகாரியிடம், வழக்கத்தை விட மும்மடங்கு கட்டணம் வசூலித்ததற்கு பயணிகள் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த பயணிகள் சமூக இடைவெளியின்றி பயணிக்க வைத்ததாகவும் அந்த வீடியோவில் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனையடுத்து, இந்த வீடியோவை ஆராய்ச்சி செய்ததில், இந்த வீடியோ இந்திய விமான சேவை வழங்கும் விமானத்தில் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. இந்த வீடியோ உண்மையில் பாகிஸ்தான் நட்டு விமானத்தில் எடுக்கப்பட்டதென்றும், அந்த விமானத்தில் இருக்கை மற்றும் கவர்கள் ஏர் இந்தியா விமானத்தில் இருப்பதை விட வித்தியாசமாக இருப்பதும் தெரிகிறது.
இதனையடுத்து, ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் தனஞ்செய் குமார் அவர்கள் இதுகுறித்து விளக்கமளிக்கையில், வீடியோ இந்திய விமானத்தில் எடுக்கப்பட்டதாக நம்பி பலர் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். வைரல் வீடியோ பாகிஸ்தான் நாட்டு விமானத்தில் எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
மேலும், ட்விட்டரில் ஏர் இந்தியா கணக்கை டேக் செய்து வீடியோ பற்றி புகார் அளித்தவருக்கும், ஏர் இந்தியா ட்விட்டர் கணக்கில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…