இந்தியர்களை மீட்டுவர புறப்படுகிறது ஏர் இந்திய விமானம்.! மத்திய அரசு அதிரடி நடவடிக்கை.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • கொரோனா வைரசினால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உள்ளன. இதனால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவில் உள்ள தங்களது குடிமக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன.
  • அந்நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்துவந்தனர். இவர்களை மீட்டுவர இந்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதன்படி ஏர் இந்தியா விமானம் இன்று சீனாவுக்குப் புறப்பட்டவுள்ளது.

கொரோனா வைரசினால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உள்ளன. சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய இந்த வைரசினால் அந்நாட்டில் இதுவரை 213க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.10,000க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா இந்தோனேசியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்பட 18 நாடுகளில் இந்த வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவில் உள்ள தங்களது குடிமக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்துவந்தனர். இவர்களை மீட்டுவர இந்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதன்படி ஏர் இந்தியா விமானம் இன்று சீனாவுக்குப் புறப்பட்டவுள்ளது.

இந்நிலையில், ஏர் இந்தியாவின் ஜம்போ ஜெட் விமானம் (AI B747) டெல்லியிலிருந்து இன்று பிற்பகல் 12.50 மணிக்கு சீனாவுக்குப் புறப்படும். சீனா செல்லும் சிறப்பு விமானத்தில் சுகாதாரத்துறை சார்பில் ஐந்து மருத்துவர்கள் தேவையான மருத்தவ உபகரணங்களுடன் பயணிக்கின்றனர். 4 விமானங்கள், 15 விமானப் பணியாளர்கள் 3 எஞ்சினியர்கள் உள்ளிட்ட 33 விமானப் பணியாளர்களும் சிறப்பு விமானத்தில் செல்வார்கள். ஏர் இந்தியா இயக்குநர் கேப்டன் அமிதாப் சிங்கும் சிறப்பு விமானத்தில் மேற்பார்வையாளராகச் செல்வார். பின்னர் 423 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் சீனாவில் மாட்டிக் கொண்டிருக்கும் 380 இந்தியர்கள் அழைத்துவரப்படுவர்.

மேலும், உள்நாட்டு நேரப்படி வுஹான் நகரில் இரவு 10 மணிக்கு இந்தியர்களை இந்த விமானம் ஏற்றிக்கொண்டு புறப்படும், மறுநாள் அதிகாலை 2 மணிக்கு டெல்லி வந்தடையும் எனக் கருதப்படுகிறது. வானிலை காரணமாக 45 நிமிடங்கள் வரை தாமதமாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பம் முதலே நாங்கள் சிறப்பு விமானத்துடன் தயாராக இருக்கிறோம். சீனா அரசிடமிருந்து ஒப்புதல் கிடைப்பதற்காகவே காத்திருந்தோம். எங்கள் குழுவினர் அனைவரும் சீனாவில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்துவர ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

15 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

16 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

17 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

17 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

19 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

20 hours ago