கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால், லடாக் எல்லையில் இரு நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டது.இதனிடையே தான் இந்தியா- சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது.இதில், இந்தியா வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர்.
இந்த சம்பவம் இரு நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்தது. இதனை தொடர்ந்து, அண்மையில் பிரதமர் மோடி, லடாக் எல்லை பகுதிக்கு சென்று ராணுவ வீரர்களை சந்தித்து, கலந்துரையாடிவிட்டு வந்தார். இதனால், இருநாட்டு எல்லை பிரச்சனை மீண்டும் பதற்றநிலையை அடைந்தது.
இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அஜித் தோவல் நேற்று பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒப்பந்தத்தின்படி விரைவில் சீன மற்றும் இந்திய ராணுவத்தினரும் எல்லைப்பகுதியில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவதற்கான செயல்களைத் துரிதப்படுத்துவது குறித்தும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…