மகாராஷ்டிராவில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்பொழுதும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில் சில மாநிலங்களில் மட்டும் மக்களின் வாழ்வாதாரம் கருதி அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கொண்டிருந்தாலும், கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி நவராத்திரி பண்டிகை. மகாராஷ்டிராவின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி தான். எனவே இதனை முன்னிட்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் முறையான கொரோனா தடுப்பு வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…