மதத்தைப் பொருட்படுத்தாமல் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு- அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி..!

Published by
murugan

தங்கள் மதத்தைப் பொருட்படுத்தாமல் யாரை திருமணம் செய்ய விரும்புகிறார்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உண்டு  என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு காதல் ஜோடி இருவரும் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், அந்த இளைஞர் இந்து மதத்தை சார்ந்தவர் எனவும், அந்த பெண் ஒரு முஸ்லீம் மதத்தை சார்ந்தவர் எனவும் இதனால், பெண்ணின் குடும்பம் திருமணம் செய்ய அனுமதிக்கவில்லை. அந்த இளைஞரின் திருமணத்திற்கு தாய்  அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் அவரது தந்தை திருமணத்திற்கு அனுமதி அளிக்க வில்லை. இதனால், எதிர்காலத்தில் தங்கள் உயிருக்கு இவர்களால் ஆபத்து ஏற்படலாம் என்று கூறி இருவரும் நீதிமன்றத்திடம் பாதுகாப்பு கோரினர்.

இந்த மனு மீதான நீதிபதிகள் மனோஜ் குமார் குப்தா மற்றும் தீபக் வர்மா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு ஆண்,பெண் தங்கள் மதத்தைப் பொருட்படுத்தாமல், யாரை திருமணம் செய்ய விரும்புகிறார்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்களின் திருமண வாழ்க்கையில் யாரும் தலையிட உரிமை இல்லை, அவர்களின் பெற்றோருக்கு கூட திருமண வாழ்க்கையில் தலையிட உரிமை இல்லை என்று கூறினர்.

மேலும், இவருகளுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களின் பெற்றோர்களாலோ அல்லது வேறு நபர்களாலோ எந்த விதத்திலும் ஆபத்து இல்லை என்பதை உறுதி செய்யுமாறு காவல்துறைக்கு  நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, ​முஸ்லிம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாற விண்ணப்பம் தாக்கல் செய்ததாக அந்த பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த விண்ணப்பத்தின் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

Published by
murugan

Recent Posts

கைலாசா எங்கே? நித்தியானந்தா எங்கே? மதுரை கிளை சரமாரி கேள்வி.! நித்யானந்தா சீடர்கள் அளித்த பதில்.!

கைலாசா எங்கே? நித்தியானந்தா எங்கே? மதுரை கிளை சரமாரி கேள்வி.! நித்யானந்தா சீடர்கள் அளித்த பதில்.!

மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…

24 minutes ago

மருத்துவமனைக்கு ‘Jack Sparrow’ வேடத்தில் சென்று குழந்தைகளை மகிழ்வித்தார் ஜானி டெப்.!

ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…

1 hour ago

“ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்” – அமித் ஷா.!

டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…

2 hours ago

“என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் 100% பொய்யானவை” – அன்புமணி ராமதாஸ்.!

சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…

2 hours ago

”பாமக எம்எல்ஏக்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும்”- அன்புமணி.!

சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…

2 hours ago

“போகப் போகத் தெரியும்” – அன்புமணி குறித்து கேள்விக்கு பாடல் பாடி ராமதாஸ் பதில்.!

சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…

3 hours ago