கொரோனா நோயாளியை ஏற்றிச் செல்லும்போது விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் – 3 பேர் உயிரிழப்பு!

Published by
Rebekal
  • கேரளாவில் கொரோனா நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொழுது ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியுள்ளது.
  • இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலத்திலுள்ள கண்ணூரை அடுத்த சுண்டபாறை பகுதியை சேர்ந்த பிஜோய் எனும் 45 வயது நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த இவரது உடல்நிலை மோசமானதை அடுத்து, இவர் கண்ணூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரை ஏற்றி சென்ற பொழுது ஆம்புலன்சில் விஜய்யின் சகோதரி மற்றும் அவரது உறவுக்கார நபர் பொன்னி என்பவரும் இருந்துள்ளனர்.

ஆம்புலன்ஸை நித்திஷ் ராஜ் என்பவர் ஓட்டியுள்ளார். கண்ணூரில் இருந்து இளையாவூர் அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலை ஓரம் இருந்த மரத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் முன்பகுதி பலத்த சேதம் அடைந்து, அதன் ஓட்டுனர் உட்பட ஆம்புலன்சில் இருந்த நான்கு பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியுள்ளனர்.

அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து பிறகு விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயற்சித்துள்ளனர். பின் தீயணைப்பு துறையினருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் முன்புறம் மிகவும் நசுங்கியதால் கதவுகள் வெட்டி எடுத்து தான் உள்ளே இருந்தவர்கள் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளனர். அப்பொழுது கொரோனா நோயாளி பிஜோய் மற்றும் அவரது சகோதரி, டிரைவர் ஆகிய மூன்று பேரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

அவரது உறவினர் பொன்னி என்பவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறலால் மருத்துவமனைக்கு செல்லும் பொழுது, ஆம்புலன்ஸ் விபத்தில் கொரோனா நோயாளி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

1 hour ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

2 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

2 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

3 hours ago

“ஈரான் ராணுவத் தளபதி அலி ஷத்மானி கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு.!

தெஹ்ரான் : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தீவிரம்…

3 hours ago

ஒரே இடத்தில் வைத்து ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை.!

திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில்…

4 hours ago