baby [Imagesource : JVP]
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வார் தாலுகாவில் உள்ள சித்தராடா கிராமத்தில் வசித்து வருபவர்கள், சந்தோஷ் கல்குட்கர் – சஞ்சனா கல்குட்கர் தம்பதியினர். இவர்களது மகள் தான் சானித்யா.
இந்த நிலையில், அவர்களது வீட்டில் மொபைல் சார்ஜர் சுவிட்ச் போர்டில் இணைக்கப்பட்டிருந்துள்ளது. சுவிட்ச் அணைக்கப்படவில்லை. இந்த நிலையில், குழந்தை சானித்யா சார்ஜர் ஒயர் பின்னை மென்று சாப்பிட்ட போது மின்சாரம் தாக்கியது. இதனையடுத்து, குடும்பத்தினர் உடனடியாக அவரை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அவரது தந்தை, சந்தோஷ் கல்குடக், ஹுப்பள்ளி மின்சாரம் வழங்கும் நிறுவனத்தில் (ஹெஸ்காம்) ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிகிறார். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், அவர் பணியிடத்தில் மயங்கி விழுந்துள்ளார். சானித்யா தம்பதியருக்கு மூன்றாவது குழந்தை ஆகும். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…
சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…