முக்கியச் செய்திகள்

அமெரிக்காவில் ஜிம்மில் கத்தியால் குத்தப்பட்ட இந்திய மாணவர் உயிரிழப்பு..!

Published by
murugan

தெலுங்கானாவை சார்ந்த 24 வயதான வருண் ராஜ் புச்சா என்பவர் அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் வால்பரைசோ பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மாணவராக இருந்துள்ளார். கடந்த அக்டோபர் 29 அன்று உடற்பயிற்சி கூடத்தில் ஜோர்டான் ஆண்ட்ரேட் என்பவர் கத்தியால் வருண் ராஜ் புச்சா குத்தினார்.

இதைதொடர்ந்து, ஃபோர்ட் வெய்னின் லூத்தரன் மருத்துவமனையில் வருண் ராஜ் புச்சா சிகிக்சை பெற்று வந்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று அவரது உறவினர் கூறியதாக கூறப்ப்படுகிறது. இந்நிலையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வருண் ராஜ் புச்சா இன்று உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். புச்சாவின் உறவினர்கள் சிலர் அமெரிக்காவில் வசித்து வந்தனர்.

அதே சமயம் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் இந்தியாவில் வசிக்கின்றனர். ஜோர்டான் ஆண்ட்ராட் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் வருண் ராஜ் உடன் நேரடியாக பேசியது கிடையாது. ஆனால் அவரால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதை அறிந்தேன். அதனால் தான் கத்தியால் குத்தினேன் என கூறியுள்ளார். அமெரிக்காவில் வருண் கணினி அறிவியலில் முதுகலைப் படித்துக் கொண்டிருந்தார். இந்தியாவில் இருந்து கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவிற்குப் புறப்பட்டார். அடுத்த ஆண்டு தனது படிப்பை முடித்த பிறகு தெலுங்கானாவின் கம்மத்திற்கு அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வட அமெரிக்க தெலுங்கு சங்கம் வருணின் குடும்பத்திற்காக ரூ.90,000 நீதி திரட்டியது. வருணின் தந்தை தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். அவரது உடலை இந்தியா கொண்டு வந்து தகனம் செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Published by
murugan

Recent Posts

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

19 minutes ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

43 minutes ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

1 hour ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

3 hours ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

3 hours ago

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

4 hours ago