ஆந்திர பிரதேசம் : கணவர் முன்பு கர்ப்பிணி பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த கும்பல் ..!

Published by
Rebekal

ஆந்திர பிரதேசம் மாநிலத்திலுள்ள பாபட்லா மாவட்ட ரயில் நிலையத்தில் கணவன் முன்னிலையில் கர்ப்பிணி பெண் கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு குண்டூரில் இருந்து கிருஷ்ணா மாவட்டத்திற்கு தனது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த கர்ப்பிணிப் பெண்ணிடம் குடிபோதையில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் தகராறு செய்துள்ளது.

அப்பொழுது கணவர் அவர்களை தடுக்க முற்பட்டபோது, 3 பேரும் சேர்ந்து கணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன்பின் கர்ப்பிணிப் பெண்ணை அங்கிருந்து கடத்தி சென்ற கும்பல், பலாத்காரம் செய்துவிட்டு முட்புதர் அருகே விட்டு சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ரயில்வே காவல் துறையினரிடம் இந்த தகவலை கூறுவதற்கு முயற்சித்தபோது ரயில் நிலையத்தில் எந்த அதிகாரியும் தனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆந்திர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன், பலாத்காரம் செய்பவர்களுக்கு தண்டனையும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய திட்டங்களும் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Recent Posts

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…

20 minutes ago

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…

48 minutes ago

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

3 hours ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

3 hours ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

4 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

5 hours ago