தங்ககடத்தல் தகராறு-ஜாமீனில் ஸ்வப்னா-பாய்ந்தது வழக்கு-!பிடிவாரண்ட் பிறப்பிப்பு??

Published by
Kaliraj

கேரள தங்க கடத்தல் விவகாரம் ஸ்வப்னா சுரேஷ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு சுங்கத்துறை நடவடிக்கை.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் சர்வதேச விமானநிலையத்தில் கடந்த ஜூலை 5ல் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் ரூ.15 கோடி மதிப்புடைய தங்கத்தை கடத்தி வந்ததை  கையும் களவுமாக சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த விவாகரம் விஷ்வரூபம் எடுக்கவே வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கையில் எடுத்தது.சுங்கத் துறை மற்றும் அமலாக்கத் துறை கூட்டாக விசாரித்து வருகின்றது.இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக என்று கருதப்படும் கேரள அரசின் தகவல்தொழில்நுட்பத் துறை பிரிவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் என்கிற மும்தாஜ்,இவர் உட்பட 20 பேர் உடன் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷ், திரிசூர் மாவட்டத்தின் விய்யூரில் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

சுங்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மூளையாக செயல்பட்ட ஸ்வப்னாவுக்கு ஜாமீன் கிடைத்தது. இருப்பினும், தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்குகளில் ஜாமீன் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷ் மீது அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின்கீழ் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஸ்வப்னாவை கைது செய்ய சுங்கத்துறை பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது.

ஒருவர் மீது அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படுமாயின் விசாரணை இன்றி ஒரு ஆண்டு வரை தடுப்புக் காவலில் சம்பந்தப்பட்டவரை வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

1 hour ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

2 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

5 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

5 hours ago

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…

6 hours ago

ஹைதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு.!

ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…

7 hours ago