#Fact Check: கொரோனாவால் புகைபிடிப்பவர்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்கள் குறைவாக பாதிக்கப்படுகிறார்களா..?

Published by
murugan

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலைகளை கையாண்டு வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுநோயைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் கூறியதாக பகிரப்பப்டும் ( CSIR) வெளியிட்டதாக வெளியான ஒரு அறிக்கையில் சைவ உணவு சாப்பிடுபவர்கள் மற்றும் புகைபிடிப்பவர்கள் கொரோனாவிற்கு குறைவாக பாதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

இது குறித்து,பத்திரிகை தகவல் பணியகம் (PIB) தனது ட்விட்டரில் கடந்த மாதம் 26-ஆம் தேதி வெளியிட்ட பதிவில், CSIR வெளியிட்ட அறிக்கையில் சைவ உணவு சாப்பிடுபவர்கள் மற்றும் புகைபிடிப்பவர்கள் கொரோனாவிற்கு குறைவாக பாதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்ட தகவலை மறுத்துள்ளது.

CSIR வெளியிட்ட தகவலை மேற்கோள் காட்டி சைவ உணவு மற்றும் புகைபிடித்தல் கொரோனாவிலிருந்து பாதுகாக்கக்கூடிய செரோலாஜிக்கல் ஆய்வுகளின் அடிப்படையில் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் ஏப்ரல் 24, 2021 வெளியான பத்திரிகை குறிப்பை சி.எஸ்.ஐ.ஆர் வெளியிடவில்லை என பத்திரிகை தகவல் பணியகம் (PIB) தெளிவுபடுத்தியுள்ளது.

இது போன்ற ஆய்வுகளில், எந்தவொரு அளவுருவுடனான தொடர்புகளும் சோதனை ரீதியாக நிரூபிக்கப்படும் வரை காரணியாக கருதப்படக்கூடாது. எனவே, இந்த ஆய்வுகளின் அடிப்படையில் சைவ உணவு மற்றும் புகைபிடித்தல் கொரோனாவிலிருந்து பாதுகாக்கப்படலாம் என்று எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று சி.எஸ்.ஐ.ஆர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இணையத்தில் நிலவும் தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளைத் தடுப்பதற்காக PIB Fact Check கடந்த 2019 டிசம்பரில் அறிமுகமானது. அதன் நோக்கம் பல்வேறு சமூக ஊடக தளங்களில் பரவி வரும் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை அடையாளம் காண்பது ஆகும். இதுபோன்ற தவறான தகவல்களைப் பற்றி அரசு மக்களுக்கு மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சரியான தகவல்களை மட்டுமே நம்பும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

16 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

16 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

17 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

17 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

18 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

19 hours ago