‘ஷைனிஹண்டர்’ என்ற ஹாக்கர் குழு, பிரபல மளிகை பொருள் வினியோகம் செய்யும் பிக்பாஸ்கேட்டின் தரவு தளத்தை, ஹேக் செய்து, தகவல்களை கசிய விட்டுள்ளனர்.
இன்று சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இணையத்தில் தான் உலா வருகின்றனர். இணையம் இன்று பலருக்கும் பொழுதை போக்கும் ஒரு இடமாக உள்ளது. தங்களது தேவைகளை இணையத்தின் மூலமாக பூர்த்தி செய்யும் வகையில், வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களில் இருந்து மற்ற அனைத்துப் பொருட்களுமே இணையத்தின் மூலம் ஆர்டர் செய்து பெறுகின்றனர். இதன் மூலம் பல வகையான சிக்கல்களும் ஏற்படுகிறது.
அந்த வகையில், ‘ஷைனிஹண்டர்’ என்ற ஹாக்கர் குழு, பிரபல மளிகை பொருள் வினியோகம் செய்யும் பிக்பாஸ்கேட்டின் தரவு தளத்தை, ஹேக் செய்து, தகவல்களை கசிய விட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 2 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மின்னஞ்சல்கள், பெயர்கள், கடவுச்சொற்கள், பிறந்த தேதிகள் மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற தகவல்கள் கசிந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…
சென்னை : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா, நேற்றிரவு கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…