கடந்த 2018-ம் ஆண்டு மஹாராஷ்டிராவை சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக் மற்றும் அவரது தாய் தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் தற்கொலைக்கு காரணம் அர்னாப் கோஸ்வாமி வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காததால் என கூறப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த 04- ஆம் தேதி அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இடைக்கால ஜாமீன் கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். அப்போது நீதிபதிகள் ஜாமீன் வழங்க மறுத்தனர். இதனைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அர்னாப் நேற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, இடைக்கால ஜாமீனில் விடுவிக்க அர்னாப் கோஸ்வாமி மற்றும் இரண்டு குற்றவாளிகளுக்கு ரூ.50000 பிணை தொகை கட்ட வேண்டும் என கூறி இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்படுவதாக நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் தெரிவித்துள்ளது.
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…