இருந்த ஒருவரும் குணம்..அருணாச்சல பிரதேசம் கொரோனா இல்லாத மாநிலமாக மாறியது.!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியாவில் அருணாச்சல பிரதேச மாநிலம் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவு காரணமாகி உலக நாடுகள் கொரோனாவை எதிர்த்து போர் தொடுத்து வருகின்றன. இதில் ஒரு பகுதியாக பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த கொண்டே இருக்கிறது. இதனால் பொருளாதாரத்தில் பல நாடுகள் சரிவை கண்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரசால் இதுவரை 21,83,942 பேர் பாதிக்கப்பட்டு, 1,46,873 உயிரிழந்துள்ளார்கள். சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5,52,822 பேர் குணமடைந்துள்ளார்கள்.

இந்நிலையில், கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. தினந்தோறும் பாதிப்பு உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் 13,387 பேர் பாதிக்கப்பட்டு, 437 பேர் பலியாகியுள்ளார்கள். 1,749 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகப்படியாக மகாராஷ்டிராவில் 3,205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 194 பேரை கொன்றுள்ளது. இதனிடையே அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு முதலில் கண்டறியப்பட்ட பூர்ண குணமடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பேமா காண்டு அவரது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் அருணாச்சல பிரதேச மாநிலம் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

13 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

14 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

15 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

16 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

17 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

18 hours ago