Categories: இந்தியா

சிறையில் இருந்துகொண்டே முதல்வர் வேலையை பார்க்கும் கெஜ்ரிவால்.! பறக்கும் உத்தரவுகள்…

Published by
மணிகண்டன்

Arvind Kejriwal : டெல்லி சிறையில் இருந்து கொண்டே மாநில முதல்வராக தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் தற்போது வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

அமலாக்கதுறை விசாரணையில் இருந்தாலும் முதல்வராக தனது பதவியை தொடர்ந்து செய்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். தற்போது வரை டெல்லி மாநில அரசுக்கு தேவையான உத்தரவுகளை அவர் வழங்கி வருகிறார். முன்னதாக மார்ச் 23ஆம் தேதியன்று தனது முதல் உத்தரவை பிறப்பித்தார்.

டெல்லி குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதன்முறையாக சிறையில் இருந்து உத்தரவிட்டார்.

இதனை அடுத்து, தற்போது டெல்லி மருத்துவமனையில் மாநில அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மருந்துகள் உரிய அளவில் கிடைப்பதில்லை என்றும், அந்த குறைகளை சரி செய்யுமாறும் சுகாதாரத்துறை அமைச்சர் பரத்வாஜூக்கு உத்தரவை கெஜ்ரிவால் பிறப்பித்துள்ளார்.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் , டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்த போதிலும் அவர் டெல்லி மக்களின் உடல்நலம் குறித்து கவலைப்படுகிறார் என கூறினார். இதுபோக நீர்வளத்துறை குறித்த உத்தரவை மீண்டும் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடி பிறப்பித்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Recent Posts

காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?

பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…

14 minutes ago

90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்த ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா!

மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…

42 minutes ago

இன்று இந்த 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…

1 hour ago

மே 29, 30ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

1 hour ago

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…

13 hours ago

மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…

14 hours ago