PM Modi in ASEAN Summit [Image source : Twitter/@narendramodi]
இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், புருனே, மியான்மர், கம்போடியா, திமோர்-லெஸ்டே மற்றும் லாவோஸ் ஆகிய ஆசிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள சர்வதேச கூட்டமைப்பாக ஏசியன் (ASEAN) கூட்டமைப்பு உள்ளது.
மேற்கண்ட ஏசியன் (ASEAN) கூட்டமைப்பு உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் நமது பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் இன்று இந்தோனீசியா புறப்பட்டுள்ளார். இந்த பயணம் 2 நாள் குறுகிய பயணமாக அமைய உள்ளது.
அடுத்த வாரம் ஜி20 மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளதால், இந்த ஏசியன் கூட்டமைப்பு ஆலோசனை 2 நாட்களில் முடித்து நாளை நாடு திரும்ப உள்ளார் பிரதமர் மோடி. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இன்று விமானம் மூலம் இந்தோனீசிய தலைநகர் ஜகார்தாவிற்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி. அவருக்கு இந்தோனீசிய முறைப்படி பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் உடன் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் சென்றுள்ளார்.
இந்த பயணம் பற்றி பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், ஏசியன் (ASEAN) – இந்தியா உச்சிமாநாடு ஒரு சிறந்த எதிர்காலத்திற்கானது. நமது நாட்டின் ஒத்துழைப்புக்கு இது ஒரு சான்றாகும். மனித முன்னேற்றத்திற்காக எதிர்காலத் துறைகளில் இணைந்து பணியாற்ற நாங்கள் காத்திருக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி X சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…