ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கு – குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம் என நீதிமன்றம் தீர்ப்பு …!

Published by
Rebekal

ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் தான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா எனும் ஆசிரமத்தில் அதன் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் என்பவர் இரண்டு துறவி பெண்களை பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2002ஆம் ஆண்டு இது குறித்த உண்மையை பத்திரிக்கையில் புலனாய்வு செய்து வெளியிட்ட சத்ரபதி என்பவர் 2002 ஆம் ஆண்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இதனை அடுத்து சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹிம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், கடந்த 2002 ஆம் ஆண்டே தேரா சச்சா ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் என்பவரும் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.  ஆசிரமத்தில் நடக்கக்கூடிய முறைகேடுகள் குறித்து எழுத படக்கூடிய பத்திரிகையான பூரா சச் என்பதன் பின்னணியில் ரஞ்சித் சிங் இருந்ததால் தான் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் குர்மீத் ராம், கிருஷ்ணலால், ஜஸ்பீர் சிங், சப்தில் சிங், இந்திரசேனா  உட்பட பலர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ரஞ்சித் சிங்கை கொன்ற வழக்கில் ராம் ரஹீம் மற்றும் நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இவர்களுக்கான தண்டனை என்ன என்பது குறித்து அக்டோபர் 12-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

2 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

5 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

7 hours ago