#BREAKING: லக்னோ விமான நிலையத்தில் ராகுல்காந்தி தர்ணா..!

Published by
murugan

லக்னோ விமான நிலையத்திற்கு வந்த ராகுல்காந்தி, பஞ்சப் முதல்வர் பூபேஷ் பாகல், சத்தீஸ்கர் முதல்வர் சரண்ஜித் சிங் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். 

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு அருகே மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த  விவசாயிகள் பேரணியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷிற்கு பாதுகாப்பிற்காக உடன் சென்ற கார் விவசாயிகள் மீது மோதியதாக கூறப்படுகிறது.

கார் மோதியதில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்து தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, லக்கிம்பூர் வன்முறைக்கு பல தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதனால், லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற போது போலீசார், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் கிராம எல்லையிலேயே போலீசார் கைது செய்த நிலையில், அவர் மீது வழக்குப் பதிவும் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று லக்கிம்பூர் செல்ல இருந்த நிலையில் உத்தரபிரதேச அரசு அனுமதி மறுத்தது. பின்னர், லக்கிம்பூர் செல்ல ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு உத்தரப்பிரதேச அரசு அனுமதி வழங்கப்பட்டு அவர்களுடன் மேலும் 3 பேர் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இதன்காரணமாக டெல்லி விமான நிலையத்திலிருந்து உத்தரபிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்திற்கு வந்த ராகுல்காந்தி, பஞ்சப் முதல்வர் பூபேஷ் பாகல், சத்தீஸ்கர் முதல்வர் சரண்ஜித் சிங் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.  லக்னோ விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய,  ராகுல் காந்தி உத்தரபிரதேச அரசால் எனக்கு என்ன அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், போலீசார் என்னை விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல விடவில்லை.

நாங்கள் எங்கள் காரில் (லக்கிம்பூர் கேரிக்கு) செல்ல விரும்புகிறோம். ஆனால் போலீசார் எங்களை அவர்கள் வாகனத்தில் அழைத்துச் செல்ல விரும்புகிறார்கள். எனது வாகனத்தில் செல்ல அனுமதிக்குமாறு அவர்களிடம் கேட்டேன். அவர்கள் ஏதோ திட்டமிடுகிறார்கள். அதனால், நான் இங்கே தர்ணாவில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

 

Published by
murugan

Recent Posts

ஏர் இந்தியா விமான விபத்து : 700 கிராம் தங்கம், ரூ. 80,000 பணம் மீட்பு!

ஏர் இந்தியா விமான விபத்து : 700 கிராம் தங்கம், ரூ. 80,000 பணம் மீட்பு!

அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

3 minutes ago

தயவு செஞ்சி வதந்திகளை பரப்பாதீங்க! காந்தாரா-2 படக்குழு வேதனை!

கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…

30 minutes ago

எப்பவும் இந்த கேள்வியை கேட்காதீங்க! கூட்டணி பற்றி கேட்டதால் டென்ஷனான பிரேமலதா!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…

51 minutes ago

பதற்றத்தின் உச்சியில் போர்…”ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது” ஜி7 நாடுகள் முடிவு!

கனடா :  கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…

1 hour ago

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

11 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

11 hours ago