பீகாரில் வங்கி முன் நின்றிருந்த பண வண்டியில் திருட்டு முயற்சி செய்த இரண்டு மர்ம நபர்களை துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்த பாதுகாவலர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
பீகார் மாநிலத்தில் முஸாபார்பூரில் உள்ள சென்ட்ரல் வங்கியின் வெளியில் பணத்துடன் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தனர். அப்பொழுது வண்டியில் இருக்கும் பணத்தை கொள்ளையடிப்பதற்காக மர்ம நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அதில் ஒருவர் கீழே இறங்கி வந்து பணம் இருக்க கூடிய வண்டியை நோக்கி வந்த அந்த நபர் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ளார்.
உடனே சற்றும் யோசிக்காமல் நிலைமையை புரிந்து கொண்ட பாதுகாவலர்கள் உடனே துப்பாக்கியால் சுட்டனர். இதனால், குண்டடிபட்டு உயிர்பிழைத்தால் போதும் என்று உடனே மோட்டார் சைக்கிளில் இரு மர்ம நபர்களும் ஏறி தப்பித்துள்ளனர். துப்பாக்கி வைத்து மிரட்டியும் சற்றும் அச்சம் கொள்ளாமல் புத்திசாலித்தனமாக விரட்டியடித்த பாதுகாவலர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…