தாவூத் இப்ராஹிமிற்கு சொந்தமான வீடு உட்பட 4 சொத்துக்கள் ஏலம்..!

Published by
murugan

மகாராஷ்டிராவில் உள்ள தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் நேற்று ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏலம் மும்பையில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் SAFEMA இன் கீழ் நிதி அமைச்சகத்தின் வருவாய் துறையால் நடத்தப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டம் மும்ப்கே கிராமத்தில் உள்ள அவரது விவசாய நிலமும், அவரது குழந்தைப் பருவ வீடும் ஏலம் விடப்பட்டுள்ளது.

இந்த சொத்துக்கள் அனைத்தும் தாவூத் இப்ராஹிமின் குடும்பத்தினருக்கு சொந்தமானவை என்பதால் ரூ.19 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதில் இரண்டு சொத்துக்களை யாரும் எடுக்கவில்லை. அதில் ஒரு சொத்து ரூ.2  கோடிக்கும்,  மற்றோரு சொத்து 3 லட்சத்திற்கும் ஒரே நபர் ஏலத்தில் எடுத்தார். ஏலத்தை எடுத்த நபர் குறித்த தகவல் தெரிவிக்கவில்லை. அந்த நிலத்தில் பள்ளிக்கூடம் கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து வந்த பிஸ்டோரியஸ்..!

இதற்கு முன்,  அரசால் கைப்பற்றப்பட்ட தாவூத் சொத்துக்களின் முதல் ஏலம் 2000 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. ஏலம் மிகப் பெரிய அளவில் நடந்தாலும் பயம் காரணமாக யாரும் ஏலம் எடுக்க வரவில்லை. கடந்த 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானின் கராச்சில் மறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமை  சர்வதேச குற்றவாளியாக ஐ.நா.வும், அமெரிக்காவும் அறிவித்துள்ளன. அதேநேரத்தில் இந்தியாவும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

15 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

17 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

21 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

21 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

23 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

24 hours ago