குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதே பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு வழி வகுக்கும் என்று எய்ம்ஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா, குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தான் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கும், குழந்தைகளின் வெளிப்புற நடவடிக்கைகளுக்கும் வழியாகும் என்று தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது என்பது ஒரு மைல்கல் சாதனையாகும். 2 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு பாரத் பையோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின் தடுப்பூசியின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் செப்டம்பர் மாதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து மருந்து கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலின் பின் குழந்தைகளுக்கு இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது ஆரம்பம் ஆகும் என்று கூறியுள்ளார். ஒருவேளை இதற்கு முன்னர் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் கிடைத்தால் இது குழந்தைகளுக்கு செலுத்த வாய்ப்பு உள்ளது என்று அவர் சனிக்கிழமையன்று கூறியுள்ளார். மேலும், மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தற்போது சைடஸ் காடிலா என்ற மருந்து நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான சைக்கோவ்-டி அவசர கால ஒப்புதலுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனெரலுக்கு விண்ணப்பம் செய்ய வாய்ப்பிருப்பதாகவும், இந்த தடுப்பூசி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கானது என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து எய்ம்ஸ் தலைவர், இந்த சைகோவிக்-டி மருந்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் இதுவும் குழந்தைகளுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கும் என்று கூறியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதில் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இதை சரி செய்ய கொரோனா தடுப்பூசி செலுத்துவது ஒன்றே வழி என தெரிவித்துள்ளார்.
மேலும் என்ஐடிஐ ஆயோக் உறுப்பினர் டாக்டர் பால் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை குறித்து தெரிவித்துள்ளதாவது, நம் நாட்டில் 2 முதல் 18 வயதுடையவர்கள் கிட்டத்தட்ட 13 முதல் 14 கோடி பேர் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனால் நமக்கு 25 முதல் 26 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படும் என்றும் கூறியுள்ளார். இதனால் கோவாக்ஸின் மட்டுமல்லாது சைக்கோவ்-டி தடுப்பூசியும் ஒப்புதலுக்கு பிறகு குழந்தைகளுக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…