விழுப்புரம் : கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த சூழலில் கொரோனா தொற்று பாதிப்பால் விழுப்புரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரப்பேரி கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவர், ஹைதராபாத்தில் கட்டுமான ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது கொரோனா தொற்று உறுதியான நிலையில், சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில், அவர் விழுப்புரம் அரசு […]
சென்னை : சிங்கப்பூர், ஹாங்காங்கில் பரவி வந்த கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமெடுக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 498 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதித்த 5364 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் இந்தியாவில் கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்தனர், இதனால் பலி எண்ணிக்கை 51 ஆனது. தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு, 221 பேர் மருத்துவமனையில் […]
சென்னை : இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி, 3,961 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில், குறிப்பாக சென்னை, மும்பை, மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடுகின்றன. சென்னை உள்ளிட்ட பல இந்திய நகரங்களில் புதிய கொரோனா வைரஸ் திரிபுகளான NB.1.8.1 மற்றும் LF.7 […]
சென்னை : நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 1,147, மஹாராஷ்டிராவில் 424, டெல்லியில் 294, குஜராத்தில் 223 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 511 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதாகக் […]
சென்னை : மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் 1,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மஹாராஷ்டிராவில் மட்டும் 6 பேர் பலியாகியுள்ளனர். மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப், குஜராத், டெல்லி மாநிலங்களில் புதுவகை கொரோனா பரவி வருகிறது. குஜராத்தில் 8 மாத குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஆக்ஸிஜன் சப்ளை கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் […]
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால் அந்த சமயம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு ஒரு வழியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சூழலில், இப்போது மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் மீண்டும் அச்சம் எழுந்துள்ளது. இதுவரை 257 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதைப்போல, நேற்று கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியான நிலையில் […]
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில் ஒன்றான JN.1 தான் இதற்கு காரணமாம். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை சமாளித்து விடுவதால், வேகமாக பரவுகிறது. இந்த நிலையில், சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கட்டுக்குள் உள்ளது என்று மத்திய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளது. […]
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக, சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறதாம். சிங்கப்பூரில் மட்டும் 14,200 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஹாங்காங்கில் ஒரே வாரத்தில் கொரோனாவிற்கு 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இதன் தாக்கம் தீவிரமாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்ப்பு சக்தி குறைந்து […]
சென்னை: இந்தியாவில் FLiRT என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா என்ற தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவியது. இதனையடுத்து கொரோனாவை எதிர் கொண்டு, வாழ்கை முறைகளை மாற்றி அதற்கு ஏற்றார் போல் மக்கள் வாழ பழகிவிட்டனர். இருந்தாலும் கூட, கொரோனாவின் புதிய மாறுபாடு அவ்வப்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஆனால், அதனால் எந்தவித பெரிய பாதிப்புகளும் இல்லையென கூறுகின்றனர் விஞ்ஞானிகள். அண்மையில் பரவிய கொரோனாவின் மற்றொரு […]
உலகம் முழுவதும் கொரோனா காலகட்டத்தில் செலுத்தப்பட்ட கோவிஷீல்டு என்கிற தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்துள்ளது. அஸ்ட்ராஜெனகா, ஆக்ஸ்போர்டு பல்கலை உடன் இணைந்து கொரோனாவுக்கான “கோவிஷீல்டு” தடுப்பூசியை உருவாக்கியது. சமீபத்தில், இந்த தடுப்பூசியால் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக அந்நிறுவனம் நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில், தற்போது வணிகக் காரணங்களுக்காக திரும்பப் பெறப்படுவதாக விளக்கமளித்துள்ளது. இந்த தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்த முதல் ஆண்டில் மட்டும் சுமார் 65 லட்சம் மக்கள் காப்பாற்றப்பட்டதாக ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் […]
Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் உலக முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறித்தது. கடந்த 2019ல் பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் இரண்டுகளாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் கொரோனா வைரஸை ஒழிக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும் உலக நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை கண்டுபிடித்தன. அதில் இங்கிலாந்து […]
உலகம் முழுவதும் பெரும் அழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் மீண்டும் கிரிக்கெட் உலகில் நுழைந்துள்ளது. அதன் விளைவாக பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னர் விலகியுள்ளார். இன்று காலை சான்ட்னருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் முதல் போட்டியில் இருந்து வெளியேறினார். இதனை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. “பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டிக்காக மிட்செல் சான்ட்னர் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) 760 கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் கேரளாவை சேர்ந்தவரும் மற்றொருவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளளது. இதனிடையே, நேற்றைய தினம் 775 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 44,478,047 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பால் 5,33,373பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4,423 பேர் […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. அதனால் அந்தந்த மாநிலங்களில் குறிப்பிட்ட அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த கொரோனா வைரஸானது பரிணாமம் அடைந்து தற்போது JN.1 எனும் கொரோனா மாறுபாடு பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,கொரோனா வால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 533,371-ஆக உயர்ந்துள்ளது. டிஸ்சார்ஜ் […]
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளது. நீண்ட நாட்களாக கொரோனா பாதிப்பில் தமிழ்நாட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் இருந்த நிலையில், நேற்று முன் தினம் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் முதல் கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக எல்லைகளில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது. உடல்நலப் பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவமனைகளுக்கு நேரடியாக அனுப்பி […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. அதனால் அந்தந்த மாநிலங்களில் குறிப்பிட்ட அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த கொரோனா வைரஸானது பரிணாமம் அடைந்து தற்போது JN.1 எனும் கொரோனா மாறுபாடு பரவி வருகிறது. இந்தியாவில் ஒரே நாளில் 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், 3 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர், அந்த 3 பேரும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. அதனால் அந்தந்த மாநிலங்களில் குறிப்பிட்ட அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த கொரோனா வைரஸானது பரிணாமம் அடைந்து தற்போது JN.1 எனும் கொரோனா மாறுபாடு பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தின் படி இந்தியாவில் 312 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும் 4 பேருக்கு JN-1 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு […]
கடந்த சில மாதங்களாக குறைவான எண்ணிக்கையில் பதிவாகிவந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனாவின் மற்றொரு திரிபான ஓமிக்கிரான் வைரஸ் ஜேஎன்-1 வகை வைரஸ் தொற்றானது தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இன்று ஒரே நாளில் (ஞாயிற்றுக்கிழமை) 656 கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சிகிச்சை பெரும் எண்ணிக்கை 3742 ஆக அதிகரித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா தொற்று […]
கடந்த சில மாதங்களாக குறைவான எண்ணிக்கையில் பதிவாகிவந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு, ஒரே நாளில் 752ஆக அதிகரித்துள்ளது. புதிய கொரோனா வேகமெடுக்க தொடங்கியதால், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள், பொதுவெளியில் செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் குறிப்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் […]
கடந்த சில மாதங்களாக குறைவான எண்ணிக்கையில் பதிவாகிவந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனாவின் மற்றொரு திரிபான ஓமிக்கிரான் வைரஸ் ஜேஎன்-1 வகை வைரஸ் தொற்றானது தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய திரிபானது வயதானவர்களுக்கும், வேறு நோய் தொற்றுகள் உள்ளவர்களுக்கும் சிக்கலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு, ஒரே நாளில் 752ஆக அதிகரித்துள்ளது. அதில், கேரளாவில் அதிகபட்சமாக 265 பேர் கொரோனாவால் […]