இந்தியன் ஆயில் நிறுவனம், விமான எரிபொருளின் விலையை 23 விழுக்காடு குறைத்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில், 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வண்ணம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவைகளும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஒன்றரை மாத காலமாக விமான எரிபொருளின் பயன்பாடும், தேவையும் 90 விழுக்காட்டுக்கும் மேல் குறைந்துள்ளது.
இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம், விமான எரிபொருளின் விலையை 23 விழுக்காடு குறைத்துள்ளது. அதாவது 1000 லிட்டர் எரிபொருள் விலையில் 6,812 ரூபாய் குறைத்துள்ளது. டெல்லியில் ஆயிரம் லிட்டர் விமான எரிபொருள் 22,544 ரூபாயாகவும், மும்பையில் 22,109 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 27,804 ரூபாயாகவும், சென்னையில் 23, 414 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடதக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…