அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் கட்டுமான பணிகள் குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அயோத்தியில் சுமார் 1,100 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி அவர்கள் கலந்துகொண்டு செங்கல் எடுத்து வைத்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இந்த ராமர் கோவில் உலகெங்கும் உள்ள இந்துக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ராமர் கோவிலை கட்டி முடித்து பக்தர்களுக்காக திறந்து வைக்க வேண்டும் என கோவில் அறக்கட்டளை தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ராமர் கோவிலில் விறுவிறுப்பான கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த ராமர் கோவில் கட்டுமான பணி 2025 ஆம் ஆண்டு தான் முழுமையாக முடியும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அயோத்தி சென்றுள்ள உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அவர்கள் ராமர் கோவிலின் மாதிரியை பார்வையிட்டு தரிசனம் செய்து உள்ளார். அதன் பின்பதாக ராமர் கோவிலில் நடைபெற்று வரக்கூடிய கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்த அவர், அயோத்தி ராமஜென்ம பூமி தளத்திற்கு சென்று பிரார்த்தனையும் செய்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…