அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணி : முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் ஆய்வு!

Published by
Rebekal

அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் கட்டுமான பணிகள் குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

அயோத்தியில் சுமார் 1,100 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான ராமர்  கோவில் கட்டப்பட்டு வருகிறது.  இந்த ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி அவர்கள் கலந்துகொண்டு செங்கல் எடுத்து வைத்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இந்த ராமர் கோவில் உலகெங்கும் உள்ள இந்துக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ராமர் கோவிலை கட்டி முடித்து பக்தர்களுக்காக திறந்து வைக்க வேண்டும் என கோவில் அறக்கட்டளை தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ராமர் கோவிலில் விறுவிறுப்பான கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த ராமர் கோவில் கட்டுமான பணி 2025 ஆம் ஆண்டு தான் முழுமையாக முடியும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அயோத்தி சென்றுள்ள உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அவர்கள் ராமர் கோவிலின் மாதிரியை பார்வையிட்டு தரிசனம் செய்து உள்ளார். அதன் பின்பதாக ராமர் கோவிலில் நடைபெற்று வரக்கூடிய  கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்த அவர், அயோத்தி ராமஜென்ம பூமி தளத்திற்கு சென்று பிரார்த்தனையும் செய்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

சென்னையில் மூத்த குடிமக்கள் இலவச பயணம் – இன்று முதல் டோக்கன்.!

சென்னையில் மூத்த குடிமக்கள் இலவச பயணம் – இன்று முதல் டோக்கன்.!

சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…

9 minutes ago

டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்…சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா!

பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…

11 minutes ago

”மனிதகுலம் சுவாசிக்க, சமநிலைப்படுத்த மற்றும் முழுமையடைய யோகா இன்றியமையாதது” – பிரதமர் மோடி.!

ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…

43 minutes ago

பழிக்கு பழி.., இஸ்ரேல் விஞ்ஞானிகளுக்கு குறி வைத்த ஈரான் ஏவுகணைகள்.!

ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…

55 minutes ago

”இதற்காக தான் டிரம்பின் அழைப்பை நிராகரித்தேன்” – பிரதமர் மோடி விளக்கம்.!

புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு…

1 hour ago

ஈரானின் பிரத்யேக வான்பாதை.., 290 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…

2 hours ago