ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மே 3 ஆம் தேதி வரையில் வேலிடிட்டி காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து உயர்ந்துகொண்டு இருப்பதால், ஏப்ரல் 14 ஆம் தேதி நிறைவடைய இருந்த ஊரடங்கு மே 3 வரை நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டில் முடங்கிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்களான பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மே 3 ஆம் தேதி வரையில் வேலிடிட்டி காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது. இதனிடையே பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவை ப்ரீபெய்டு சேவையை வரும் ஏப்ரல் 20ம் தேதி வரை நீட்டிப்பதாகத் தெரிவித்தது.
இதையடுத்து ஏர்டெல் நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்கியுள்ளது. அதாவது, ஏப்ரல் 17ம் தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு இன்கமிங் வசதி இலவசம் என்றும் ரூ.10 டாக் டைம் வழங்கப்படும் என்று அறிவித்தது. இருப்பினும் கொரோனா தாக்கம் குறையத்தால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தொலைத் தொடார்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், கொரோனாவால் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், பிரீபெய்ட் சிம் கார்டுகளுக்கான வேலிடிட்டி காலம் செல்போன் நிறுவனங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் மே 3 ஆம் தேதி வரை 12 கோடி வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டி காலத்தை நீட்டித்துள்ளன. ஏற்கெனவே ஏப்ரல் 17-ம் தேதிவரை நீட்டித்த நிலையில் ரீசார்ஜ் செய்வதற்கு போதிய வசதி இல்லை என்பதால் மேலும் வேலிடிட்டி காலத்தை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…