பதர்கண்டி தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிக்கு எந்த சேதாரமும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், அஸ்ஸாமில் உள்ள பதர்கண்டி சட்டசபையில் நேற்று இரவு ஒரு காரில் வாக்கு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கார் தேர்தல் ஆணையத்திற்கு சேர்ந்தது அல்ல என்று கூறி பொதுமக்கள் அந்த காரின் மீது தாக்குதல் நடத்தினர்.
பின்னர், நடத்திய விசாரணையில் அசாம் பாஜக வேட்பாளர் ஒருவரின் வாகனம் என்று தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துமாறு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்தனர். வாகனத்தில் வாக்குப்பெட்டி இருந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
வாக்கு பெட்டி எடுத்துச்சென்ற தேர்தல் ஆணையத்தின் வாகனம் பழுதானதால் எனவே அந்த வழியாக சென்ற வாகனத்திடம் “லிப்ட்” கேட்டு சென்றதாகவும், ஆனால் அது பாஜக வேட்பாளரின் வாகனம் என தெரியாது எனவும் பதர்கண்டி தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிக்கு எந்த சேதாரமும் இல்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…