பதர்கண்டி தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிக்கு எந்த சேதாரமும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், அஸ்ஸாமில் உள்ள பதர்கண்டி சட்டசபையில் நேற்று இரவு ஒரு காரில் வாக்கு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கார் தேர்தல் ஆணையத்திற்கு சேர்ந்தது அல்ல என்று கூறி பொதுமக்கள் அந்த காரின் மீது தாக்குதல் நடத்தினர்.
பின்னர், நடத்திய விசாரணையில் அசாம் பாஜக வேட்பாளர் ஒருவரின் வாகனம் என்று தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துமாறு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்தனர். வாகனத்தில் வாக்குப்பெட்டி இருந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
வாக்கு பெட்டி எடுத்துச்சென்ற தேர்தல் ஆணையத்தின் வாகனம் பழுதானதால் எனவே அந்த வழியாக சென்ற வாகனத்திடம் “லிப்ட்” கேட்டு சென்றதாகவும், ஆனால் அது பாஜக வேட்பாளரின் வாகனம் என தெரியாது எனவும் பதர்கண்டி தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிக்கு எந்த சேதாரமும் இல்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…