Mumbai Police [Image source : rediff]
பொதுமக்கள் சட்டவிரோதமாக ஒன்று கூடுவதைத் தடுக்க மும்பை காவல்துறை தடை விதித்துள்ளது.
பொது அமைதிக்கு இடையூறு, மனித உயிர்கள், உடைமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் மற்றும் கலவரம் ஏதும் ஏற்படாமல் தடுக்க ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் நடமாட்டம் மற்றும் சட்டவிரோதமாக ஒன்று கூடுவதைத் தடுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்த மும்பை காவல்துறை, பல தரப்பிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அமைதியை சீர்குலைக்கவும், பொது அமைதிக்கு இடையூறு ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாகவும், மேலும் மனித உயிர்களுக்கும், சொத்துக்களுக்கும் பெரும் ஆபத்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த உத்தரவு ஜூன் 11 ஆம் தேதி வரை நகரத்தில் அமலில் இருக்கும் என்று மும்பை காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மும்பை காவல்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் நடமாட்டம் மற்றும் சட்டவிரோதமாக ஒன்று கூடுவது கூடாது. எந்த ஊர்வலத்திலும் ஒலிபெருக்கிகள், ஒலிபெருக்கி கருவிகள், இசைக்குழு மற்றும் பட்டாசுகளை வெடித்தல் போன்றவைக் கூடாது. இந்த உத்தரவின் ஏதேனும் மீறல் தொடர்பாக ஏற்படும் தண்டனைகளை பறிமுதல் செய்தல், அபராதம் விதிக்கப்படலாம்.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…