பெங்களூரு கலவரம்! துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

Published by
லீனா

பெங்களூரு கலவரத்தில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு.

கர்நாடகாவின் புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தி. இவரது உறவினரான நவீன் என்பவர், தனது முகநூல் பக்கத்தில், இஸ்லாம் குறித்த அவதூறான கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். இவரது செயலால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்டோர், பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நவீனை கைது செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பிய நிலையில், திடீரென சீனிவாசமூர்த்தியின் வீடு மீது சரமாரி கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், சீனிவாசமூர்த்தியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டுள்ள நிலையில், வீட்டிற்கு வெளியே நின்ற வாகனங்கள்  தீக்கிரையாக்கப்பட்டன.

மேலும், சீனிவாசமூர்த்தியின் வீட்டில் தாக்கத்தால் நடத்திய அதே குழுவினரால், டிஜே ஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் வீடியோ மூலம் எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனையடுத்து, கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை இதுகுறித்து கூறுகையில், பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும். அதற்காக வன்முறையாட்டம் ஒரு தீர்வு அல்ல. மேலும் வன்முறையில் ஈடுபடுவோரை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறை சம்பவங்களால் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

7 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

7 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

8 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

9 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

10 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

10 hours ago