குஜராத் நீதிமன்றம் இந்திய நீதி அமைப்பு மற்றும் இந்தியாவின் ஜனநாயகம் இரண்டையும் பலப்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் உயர் நீதிமன்றத்தின் வைரவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் குஜராத் உயர் நீதிமன்றம் தொடங்கப்பட்டு 60 வருடங்கள் ஆனதை குறிக்கும் விதமாக தபால் தலை ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சர், உச்ச நீதிமன்றம் மற்றும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள், குஜராத் முதலமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர்.அப்பொழுது பிரதமர் மோடி பேசுகையில், குஜராத் நீதிமன்றம் இந்திய நீதி அமைப்பு மற்றும் இந்தியாவின் ஜனநாயகம் இரண்டையும் பலப்படுத்தியுள்ளது.அரசியலமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பை நமது நீதித்துறை நிறைவேற்றியுள்ளது என்று இன்று ஒவ்வொரு குடிமகனும் முழுமையான திருப்தியுடன் சொல்ல முடியும்.நாட்டில் உலகத் தரம் வாய்ந்த நீதி அமைப்பைக் கட்டியெழுப்ப பார் மற்றும் நீதித்துறை செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…