Pema Khandu 3RD CM [file image]
அருணாசலப் பிரதேசம் : நடந்து முடிந்த மக்களவை தேர்தலுடன் அருணாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிழலில், மூன்றாவது முறையாக அம்மாநில முதல்வராக பெமா காண்டு, இன்று பதவியேற்று கொண்டார். அவருடன் அமைச்சரவையில் 11 உறுப்பினர்களும் பதவியேற்றனர்.
இடாநகரில் நடைபெற்ற உள்ள டிகே மாநில மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அருணாச்சல பிரதேச முதல்வராக பெமா காண்டு மற்றும் 11 அமைச்சர்களுக்கும் அம்மாநில ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் கே.டி. பர்நாயக் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர்கள் ஜேபி நட்டா, கிரண் ரிஜிஜு, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
60 உறுப்பினர்களைக் கொண்ட அருணாச்சலப் பிரதேச சட்டசபைக்கு மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 46 இடங்களைக் கைப்பற்றியது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு, அம்மாநிலத்தில் 10 இடங்களில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…