சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் மருமகன் அபய் சிங் கொரோனாவால் உயிரிழப்பு..!

Published by
Edison

சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் மருமகன் அபய் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்துள்ளார்.

சமூக ஆர்வலரும் மறைந்த சுதந்திர போராட்ட வீரருமான ஷாஹீத் பகத் சிங்கின் மருமகன் அபய் சிங் சந்து,சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் அறிகுறிகள் காரணமாக மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,அபய் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில்,சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் வெள்ளிக்கிழமை (மே 14) மாலை அபய் சிங் சந்தூ காலமானார்.

இதனையடுத்து,அபய் சிங் சந்துவின் மரணத்திற்கு பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்,மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து,அபய் சிங் சந்துவின் மறைவு குறித்து பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இறந்த ஷாஹீத்-இ-அஸாம் பகத் சிங் ஜியின் மருமகன் அபய் சிங் சந்து ஜியின் மறைவு குறித்து அறிந்து வருத்தப்படுகிறேன்.அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். அபய் சிங் சந்து ஜியின் சிகிச்சைக்கான முழு செலவை நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்.வாகேகுரு அவருக்கு நித்திய அமைதியை வழங்கட்டும்”,என்று கூறினார்.

கொரோனா தொற்று காரணமாக இறந்த அபய் சிங் சந்தூ,மறைந்த சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் தம்பியான சர்தார் குல்பீர் சிங்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

8 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

9 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

10 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

11 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

12 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

13 hours ago