3,60,000 கிராமங்களுக்கு பாரத் நெட் இணைப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல் ..!

Published by
murugan

16 மாநிலங்களில் 3,60,000 கிராமங்களில் இணையதள இணைப்பு  திட்டத்திற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்தது.

பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 16 மாநிலங்களில் உள்ள 3,60,000 கிராமங்களில் பாரத்நெட் மூலம் இணையதள இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. அரசு-தனியார் கூட்டாண்மை மூலம் பாரத்நெட் திட்டத்தை இயக்கும் திட்டத்திற்கு அரசாங்கம் இன்று ஒப்புதல் அளித்தது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு ரூ .19,041 கோடி அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த தகவலை வழங்கினார். 16 மாநிலங்களில் உள்ள 3,60,000 கிராமங்களை இணைக்க ரூ .29,430 கோடி செலவிடப்படும் என்று பிரசாத் கூறினார். இதில், மத்திய அரசு ரூ.19,041 கோடியை வழங்கும்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் இந்த தொகையை உதவியாக வழங்கும். கடந்த 2020 ஆகஸ்ட் 15 ஆம் தேதி, நாட்டின் ஆறு லட்சம் கிராமங்களை ஆயிரம் நாட்களுக்குள் இணையதள இணைப்பு சேவைகளுடன் இணைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததாக பிரசாத் கூறினார். இந்த அறிவிப்புக்குப் பிறகுதான் இந்தத் திட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களைச் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டது.

அதன் பிறகு, பாரத் நெட் நேஷனல் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கப்பட்டன. இதுவரை 2.5 லட்சம் பஞ்சாயத்துகளில் 1.56 லட்சம் இணையதள இணைப்பு இணைக்கப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்பு அமைச்சர் தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

5 மற்றும் 8ஆம் வகுப்பில் ஃபெயில்! சிபிஎஸ்இ முடிவுக்கு அன்பில் மகேஷ் கடும் கண்டனம்!

5 மற்றும் 8ஆம் வகுப்பில் ஃபெயில்! சிபிஎஸ்இ முடிவுக்கு அன்பில் மகேஷ் கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…

48 minutes ago

“பயங்கரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவும்!” அமெரிக்கா நம்பிக்கை!

வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

2 hours ago

Live : அதிமுக செயற்குழு கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

3 hours ago

பாஜகவுடன் கூட்டணி ஏன்? இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

3 hours ago

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

4 hours ago

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…

5 hours ago