16 மாநிலங்களில் 3,60,000 கிராமங்களில் இணையதள இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்தது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 16 மாநிலங்களில் உள்ள 3,60,000 கிராமங்களில் பாரத்நெட் மூலம் இணையதள இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. அரசு-தனியார் கூட்டாண்மை மூலம் பாரத்நெட் திட்டத்தை இயக்கும் திட்டத்திற்கு அரசாங்கம் இன்று ஒப்புதல் அளித்தது.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு ரூ .19,041 கோடி அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த தகவலை வழங்கினார். 16 மாநிலங்களில் உள்ள 3,60,000 கிராமங்களை இணைக்க ரூ .29,430 கோடி செலவிடப்படும் என்று பிரசாத் கூறினார். இதில், மத்திய அரசு ரூ.19,041 கோடியை வழங்கும்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் இந்த தொகையை உதவியாக வழங்கும். கடந்த 2020 ஆகஸ்ட் 15 ஆம் தேதி, நாட்டின் ஆறு லட்சம் கிராமங்களை ஆயிரம் நாட்களுக்குள் இணையதள இணைப்பு சேவைகளுடன் இணைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததாக பிரசாத் கூறினார். இந்த அறிவிப்புக்குப் பிறகுதான் இந்தத் திட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களைச் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டது.
அதன் பிறகு, பாரத் நெட் நேஷனல் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கப்பட்டன. இதுவரை 2.5 லட்சம் பஞ்சாயத்துகளில் 1.56 லட்சம் இணையதள இணைப்பு இணைக்கப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்பு அமைச்சர் தெரிவித்தார்.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…