பீகார் : ஆர்ப்பாட்டங்கள் ,போராட்டங்கள் நடத்தினால் அரசாங்க வேலைகள் அல்லது எந்தவிதமான அரசாங்க ஒப்பந்தமும் பெற முடியாது என்று பீகார் காவல்துறை எச்சரித்துள்ளது.
பீகார் காவல்துறை சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது,அதில் ஆர்ப்பாட்டங்கள்,போராட்டங்கள்,தர்ணாவில் ஈடுபடுவது அல்லது சாலைகளை மறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அரசாங்க வேலைகள் அல்லது துப்பாக்கி உரிமம் ,பாஸ்போர்ட் போன்றவைகளை பெற முடியாது என்றும் எந்தவிதமான அரசாங்க ஒப்பந்தம் பெறுவதற்கு இது தடையாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது.
இது குறித்து பீகார் டிஜிபி எஸ்.கே.சிங்கால் பிறப்பித்த உத்தரவுப்படி,வன்முறையாக மாறக்கூடிய ஒரு போராட்டத்தில் யாராவது பங்கேற்றால்,காவல்துறையினர் அவரது நடத்தை சான்றிதழ் அல்லது எழுத்துச் சான்றிதழில் இதைக் குறிப்பிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையை குறித்து கடுமையாக விமர்சித்துள்ள ஆர்ஜேடி தலைவரும், பீகார் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஷ்வி யாதவ்,தனது ட்விட்டர் பக்கத்தில் பீகார் முதல்வர் நித்திஷ்குமார் முசோலினி மற்றும் ஹிட்லருக்கு கடுமையான போட்டியைத் தருவதாக பதிவிட்டுள்ளார்.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…