PM Modi [Image source : ANI]
பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட பிபார் ஜாய் புயல், சௌராஷ்டிரா, கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதியில் உள்ள ஜகாவ் துறைமுகத்திற்கு அருகே, 15ம் தேதி மிக தீவிர புயலாக மாறி, 150 கிமீ வேகத்தில் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 125-135 கிமீ வேகத்தில் வீசும் என்றும், அப்பகுதி முழுவதும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பிபார் ஜாய் புயல் தொடர்பான நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மதியம் 1 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில், புயலால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும், மின்சாரம், தொலைத்தொடர்பு, சுகாதாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளின் பராமரிப்பு உறுதி செய்யவும் உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…