இந்தியாவில் பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பறவை காய்ச்சசால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் இந்த மாநிலங்களில் 1200 பறவைகள் இறந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம், கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய 7 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, சண்டிகர் மற்றும் மகாராஷ்டிராவில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்படவில்லை என்றும், இந்த இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தேர்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் மேலும் பரவாமல் தடுக்க பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதில், கோழி பண்ணைகள் அல்லது கடைகளில் எதையும் அல்லது எந்த இடத்தையும் தொடுவதைத் தவிர்க்கவும். எதையும் தொட்ட உடனேயே கைகளை கழுவ வேண்டும். சுமார் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கோழியை சமைக்கவும். இறைச்சி அல்லது முட்டைகளை சாப்பிடுவதில் தவறு செய்ய வேண்டாம். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, வைரஸ் சமையல் வெப்பநிலையில் அழிக்கப்படுகிறது. இறைச்சி அல்லது முட்டைகளை மற்ற உணவு பொருட்களிலிருந்து தனித்தனியாக வைக்க வேண்டும்.
பெரும்பாலும் அரை கொதி அல்லது அரை வறுத்த முட்டையை சாப்பிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பறவை காய்ச்சலைத் தவிர்க்க உடனடியாக இந்த பழக்கத்தை மாற்றவும். கோழி வாங்கும் போது முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் வாங்கவும், சுத்தமான கோழியை மட்டும் வாங்க வேண்டும்.
நீங்கள் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்றுக்கு ஆளானால், உங்களுக்கு இருமல், வயிற்றுப்போக்கு, சுவாச பிரச்சினைகள், காய்ச்சல், தலைவலி, தசை வலி, அமைதியின்மை, மூக்கு ஒழுகுதல் அல்லது தொண்டை வலி ஏற்படலாம்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…