டெல்லியில் கொரோணா பரவலுக்கு மத்தியில் கூட துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகளை பாஜக வழங்கவில்லை என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதிலும் அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதும், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பதும் வழக்கமாக நடைபெறும் ஒன்றாகவே மாறிவிட்டது. இந்த சூழ்நிலைக்கு மத்தியில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளிகளை பின்பற்றி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் ஆளும் பாஜக கட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகளை வழங்கவில்லை என ஆம் ஆத்மி கட்சி சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் துப்புரவு பணிகளை செய்யக்கூடிய டெல்லி முனிசிபல் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் வழங்கப்படவில்லை எனவும், பாஜக துப்புரவு தொழிலாளர்களை அவமதிப்பதாகவும் ஆம் ஆதமி நகராட்சி பொறுப்பாளர் துர்கேஷ் பதக் அவர்கள் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர் அவர்கள் டெல்லியின் சுகாதார அமைப்பு சரியில்லை என்பதை திசைதிருப்பும் தந்திரம் என கூறியுள்ளார்.
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…