டெல்லியில் கொரோணா பரவலுக்கு மத்தியில் கூட துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகளை பாஜக வழங்கவில்லை என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதிலும் அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதும், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பதும் வழக்கமாக நடைபெறும் ஒன்றாகவே மாறிவிட்டது. இந்த சூழ்நிலைக்கு மத்தியில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளிகளை பின்பற்றி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் ஆளும் பாஜக கட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகளை வழங்கவில்லை என ஆம் ஆத்மி கட்சி சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் துப்புரவு பணிகளை செய்யக்கூடிய டெல்லி முனிசிபல் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் வழங்கப்படவில்லை எனவும், பாஜக துப்புரவு தொழிலாளர்களை அவமதிப்பதாகவும் ஆம் ஆதமி நகராட்சி பொறுப்பாளர் துர்கேஷ் பதக் அவர்கள் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர் அவர்கள் டெல்லியின் சுகாதார அமைப்பு சரியில்லை என்பதை திசைதிருப்பும் தந்திரம் என கூறியுள்ளார்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…