Categories: இந்தியா

தமிழகத்திற்கு நீர் திறக்கக் கூடாது என பாஜக போராட்டம்!

Published by
கெளதம்

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என கர்நாடக மாநில பாஜகவினர் போராட்டம்.

கர்நாடக மாநிலம் மாண்டியாவில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று அம்மாநிலம் ஆளும் கட்சியான காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு எதிராக, பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டால், அது கர்நாடக விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்றும், தமிழக அரசுக்கு காங்கிரஸ் பணிந்து வருவதாகவும், தண்ணீர் திறப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அக்கட்சியினர் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடக விவசாயிகள் மீது அக்கறை இல்லை என்றும், தமிழக ஆளும் கட்சியான திமுகவின் நலன்களுக்காக மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் குற்றம்சாட்டினர்.

மேலும், மாண்டியாவைச் சேர்ந்த சுயேச்சை எம்.பி. சுமலதா அம்பரீஷும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, கர்நாடக விவசாயிகள் தண்ணீரின்றி தவித்து வரும் நிலையில், மற்ற மாநிலங்களுக்கு அரசு எப்படி தண்ணீர் விட முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்தப் பிரச்சினைக்கு கர்நாடக அரசு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும், கர்நாடக விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததோடு, விவசாயிகளுக்கு ஆதரவாக அரசு முடிவு எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

Published by
கெளதம்

Recent Posts

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

12 minutes ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

1 hour ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

2 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

2 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

3 hours ago

அங்கன்வாடி மையங்கள் மூடலா? விளக்கம் கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…

4 hours ago