Rajyasaba BJP MP Naresh Bansal [File Image]
இந்தியா என்ற பெயரை நீக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் பாஜக எம்பி நரேஷ் பன்சால் பேசியுள்ளார்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கி 7 நாட்கள் முடிவடைந்து உள்ளது. இந்த ஏழு நாட்களும் மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு, முடங்கி வருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் பேசிய பாஜக எம்.பி நரேஷ் பன்சால் இந்தியா எனும் பெயர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஆங்கிலேயர்கள் தான் பாரதத்தின் பெயரை இந்தியா என மாற்றினார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது நாடு பாரதம் எனும் பெயரில்தான் அறியப்பட்டு வந்துள்ளது. இதற்கான பழங்கால சான்றுகள் சமஸ்கிருத நூல்களில் உள்ளன என்று குறிப்பிட்டார்.
மேலும், காலனித்தவ ராஜ்ஜியத்தால் (ஆங்கிலேயர்களால்) இந்தியா என்னும் பெயர் வழங்கப்பட்டது. இது அடிமைத்தனத்தின் சின்னமாக உள்ளது. எனவே இந்தியா என்ற பெயரை அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும். கடந்த வருடம் சுதந்திர தினத்தின் போது செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றுகையில் காலணித்துவத்தின் அனைத்து சின்னங்களையும் அளிக்க வேண்டும் என்று பேசி இருந்தார் என்று பிரதமர் மோடி பேசியது குறித்தும் குறிப்பிட்டு இந்தியாவின் பெயரை அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார் பாஜக எம்.பி நரேஷ் பன்சால்.
இந்தியா எனும் பெயரை நீக்க வேண்டும் என கூறிய பாஜக எம்.பி நரேஷ் பன்சாலின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…