Rajyasaba BJP MP Naresh Bansal [File Image]
இந்தியா என்ற பெயரை நீக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் பாஜக எம்பி நரேஷ் பன்சால் பேசியுள்ளார்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கி 7 நாட்கள் முடிவடைந்து உள்ளது. இந்த ஏழு நாட்களும் மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு, முடங்கி வருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் பேசிய பாஜக எம்.பி நரேஷ் பன்சால் இந்தியா எனும் பெயர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஆங்கிலேயர்கள் தான் பாரதத்தின் பெயரை இந்தியா என மாற்றினார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது நாடு பாரதம் எனும் பெயரில்தான் அறியப்பட்டு வந்துள்ளது. இதற்கான பழங்கால சான்றுகள் சமஸ்கிருத நூல்களில் உள்ளன என்று குறிப்பிட்டார்.
மேலும், காலனித்தவ ராஜ்ஜியத்தால் (ஆங்கிலேயர்களால்) இந்தியா என்னும் பெயர் வழங்கப்பட்டது. இது அடிமைத்தனத்தின் சின்னமாக உள்ளது. எனவே இந்தியா என்ற பெயரை அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும். கடந்த வருடம் சுதந்திர தினத்தின் போது செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றுகையில் காலணித்துவத்தின் அனைத்து சின்னங்களையும் அளிக்க வேண்டும் என்று பேசி இருந்தார் என்று பிரதமர் மோடி பேசியது குறித்தும் குறிப்பிட்டு இந்தியாவின் பெயரை அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார் பாஜக எம்.பி நரேஷ் பன்சால்.
இந்தியா எனும் பெயரை நீக்க வேண்டும் என கூறிய பாஜக எம்.பி நரேஷ் பன்சாலின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…