ராஞ்சியில் பாஜக எம்பி ஒருவர் மல்யுத்த வீரரை மேடையிலேயே அறைந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி.
ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் 15 வயதிற்கு உட்பட்பட்டவர்களுக்கு நடந்த தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக எம்பியும், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ்பூஷன் சரண் சிங் பங்கேற்றார். அப்போது 15 வயது பூர்த்தி அடைந்த ஒருவர் தன்னை போட்டியில் பங்கேற்க செய்யும்படி பிரிஜ்பூஷனிடம் நிர்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.
அந்த மல்யுத்த வீரர் 15 வயதுக்கு மேல் உள்ளவர் என்பதால் அவருக்கு தகுதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்ததாகவும், மீண்டும் நிர்பந்தித்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜக எம்பி அந்த வீரரை மேடையிலேயே அறைந்தார். இதன் பின் அந்த இளைஞர் மேடையில் இருந்து அழைத்து செல்லப்பட்டார். மல்யுத்த வீரரை மேடையிலேயே அறைந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த கைசர்கஞ்ச் தொகுதி எம்பியாக பிரிஜ்பூஷன் ஷரன் சிங் உள்ள இவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…