டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று நடக்க உள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் கடந்த நவ.29ஆம் தேதி தொடங்கியது. இதற்கு ஒரு நாள் முன்பாகவே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அன்றே பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்பிக்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, இரு அவைகளிலும் பாஜக எம்பிக்கள் தவறாமல் வர வேண்டும் என உத்தரவிட்டார்.
இதன் பின்னரும் சில பாஜக எம்பிக்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். கடந்த வாரம் மீண்டும் நாடாளுமன்ற பாஜக எம்பிக்கள் கூட்டத்தைக் கூட்டிய பிரதமர், எம்பிக்கள் அவர்களது செயல்பாட்டை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் மாற்றங்கள் தானாக நிகழும் என எச்சரித்தார்.
இதனைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் எதிர்க்கட்சியினர் கடும் அமளிக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று நடக்க உள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் மூன்று வேலை நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இன்று பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் நடக்கவுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தவறாது பங்கேற்க வேண்டும் என எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…