கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால், பள்ளி நேரத்தை மாற்றியமைக்க மத்திய அரசு அறிவுறுத்தல்.
இந்தியாவில் பல மாநிலங்களில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடுமையான வெப்பம் குறித்து இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மத்திய கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் பள்ளி வகுப்புகள் காலை 7 மணிக்கு தொடங்கி நண்பகலுக்குள் முடிக்கலாம் என்றும், பள்ளியில் நடத்தப்படும் வழிபாடு நிழலாக உள்ள பகுதியில் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெயில் அதிகமாக உள்ளதால் வெளி விளையாட்டுகளை காலை நேரத்திலேயே நடத்த வேண்டும் என்றும், பள்ளி வாகனங்களில் அதிக அளவிற்கு மாணவர்களை ஏற்றக்கூடாது என்றும், முதலுதவி பெட்டி அவசியம், முடிந்த அளவு தங்கள் குழந்தைகளை பெற்றோர்களே அழைத்து வரலாம் என்றும் மத்திய கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…