Categories: இந்தியா

கிசான் திட்டம்: வங்கிக் கணக்கில் வருகிறது ரூ.2000.. இவர்களுக்கு மட்டும் கிடையாது.!

Published by
கெளதம்

கிசான் சம்மன் நிதி யோஜனா : நாடு முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு மத்திய அரசின் ‘பிரதமர் கிசான்’ திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு ரூ.6,000 பணத்தை 3 தவணைகளாக (ரூ.2,000 வீதம்) வழங்கி வருகிறது.

இது வரை 16 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 17வது தவணை தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதன்படி, நாளை மறுநாள் (ஜூன் 18) விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000 வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 17-வது தவணை மூலம், நாடு முழுவதும் உள்ள சுமார் 9.3 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி வழங்கப்பட உள்ளது. 2 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் கிசான் திட்டத்தில் உடல் ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கு கிடையாது?

இந்நிலையில், eKYC பூர்த்தி செய்யாதவர்களுக்கு இந்த முறை பணம் கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. pmkisan.gov.in இணையதளத்தின் மூலமாகவோ, அருகிலுள்ள டிஜிட்டல் சேவா போர்டல் (csc) செண்டர் மூலமாகவோ eKYC பூர்த்தி செய்யலாம்.

eKYC  ஆன்லைனில் பெறுவது எப்படி?

  • https://pmkisan.gov.in/ இணையதளத்தை பார்வையிடவும்.
  • ‘விவசாயிகள் கார்னர்’ என்பதன் கீழ், e-KYC விருப்பத்தைப் பார்த்து, அதனை கிளிக் செய்யவும்.
  • இப்பொது, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் உங்கள் ஆதார் விவரங்களை கொடுக்கவும்.
  • சரிபார்ப்பிற்காக மொபைல் போனுக்கு OTP அனுப்பப்படும்.
  • அந்த OTP-ஐ கொடுத்தால் போதும், e-KYC செயல்முறை முடிவடையும்.
Published by
கெளதம்

Recent Posts

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

31 minutes ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

1 hour ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

2 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

2 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

3 hours ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

4 hours ago