PM Kisan Scheme [file image]
கிசான் சம்மன் நிதி யோஜனா : நாடு முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு மத்திய அரசின் ‘பிரதமர் கிசான்’ திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு ரூ.6,000 பணத்தை 3 தவணைகளாக (ரூ.2,000 வீதம்) வழங்கி வருகிறது.
இது வரை 16 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 17வது தவணை தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதன்படி, நாளை மறுநாள் (ஜூன் 18) விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000 வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 17-வது தவணை மூலம், நாடு முழுவதும் உள்ள சுமார் 9.3 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி வழங்கப்பட உள்ளது. 2 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் கிசான் திட்டத்தில் உடல் ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், eKYC பூர்த்தி செய்யாதவர்களுக்கு இந்த முறை பணம் கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. pmkisan.gov.in இணையதளத்தின் மூலமாகவோ, அருகிலுள்ள டிஜிட்டல் சேவா போர்டல் (csc) செண்டர் மூலமாகவோ eKYC பூர்த்தி செய்யலாம்.
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…