எல்லை விவகாரம் : இன்று இந்தியா – சீன ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை.!

Published by
murugan

இன்று இந்தியா, சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

லடாக் எல்லையினல் இந்திய-சீன வீரர்கள் இடையே கடந்த மாதம் 15-ஆம் தேதி நடந்த மோதலில்  இந்திய தரப்பில் 20 ராணுவ வீரா்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டதாக  கூறப்பட்டது. இதனை, இதுவரை  சீன அதிகாரப்பூா்வமாக அறிவிக்கவில்லை.

இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் இந்திய-சீனப் படைகள்  குவிக்கப்பட்டன. இதனால், பதற்றம் நிலவியது. இதையடுத்து, இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது.  இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்திலும், இரு நாட்டு  தூதரக அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முடிவில்,  பிரச்னைக்குரிய எல்லைப் பகுதியில் இருந்து சீன ராணுவம் தனது படைகளை திரும்பப் பெறத் தொடங்கியது.

கடந்த திங்கள்கிழமை ரோந்து புள்ளி 15 -யில் இருந்து  ராணுவ முகாம்கள் போன்றவற்றை  சீன ராணுவம் அப்புறப்படுத்தி  பின்வாங்கியது. சமீபத்தில் இருநாட்டு ராணுவமும் எல்லையில் தங்கள் படைகளை விலகி கொண்டது. இரு நாடும் படைகளை விலகி கொண்டதால் சற்று பதற்றம் குறைந்தது.

இந்நிலையில், இன்று மீண்டும் இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றவுள்ளது. ராணுவ தரப்பில் நடப்பது இது நான்காம் பேச்சுவார்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

4 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

5 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

6 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

6 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

8 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

9 hours ago