#Breaking:30 நிமிட சந்திப்பு நிறைவு;பிரதமரிடம் முதல்வர் பேசியது என்ன?..!

Published by
Edison

டெல்லி:இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவ மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை.

திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமரை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.அந்த வகையில், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்றம் வருகை தந்தார்.நாடாளுமன்றம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக உறுப்பினர்கள் வரவேற்றனர்.

சந்திப்பு நிறைவு:

இந்நிலையில்,நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள  அலுவலகத்தில்பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து பேசினார்.முதல்வர் பிரதமரின் இந்த சந்திப்பு 30 நிமிடங்களில் நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது.

பிரதமரிடம் பேசியது என்ன?:

இந்நிலையில்,இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உயிர்காக்கும் மருந்துகள்,உணவுப்பொருட்கள் உள்ளிட்டவைகளை கொடுத்து உதவ அனுமதிக்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன்படி,இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வழியாக இலங்கை தமிழர்களுக்கு உதவிகளை வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பச்சிளம் குழந்தையுடன் ஆபத்தான கடல் பயணம்:

ஆபத்தான கடல் பயணத்தில் பச்சிளம் குழந்தையுடன் இலங்கை தமிழர்கள் 16 பேர் தமிழகம் வந்த நிலையிலும்,இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள் மேலும் தமிழகம் வரும் சூழலிலும் பிரதமரிடம் முதல்வர் இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய கோரிக்கைகள்:

மேலும்,மேகதாது விவகாரம்,நீட் விலக்கு,தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை விடுவித்தல்,மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரம்,மழை வெள்ளம் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான நிதி,ஜிஎஸ்டி நிலுவை தொகையை விடுவித்தல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம்  முதல்வர் ஸ்டாலின் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Recent Posts

சென்னையில் இருந்து செல்லவும், வரவும்விருந்த 8 விமானங்கள் ரத்து.!

சென்னையில் இருந்து செல்லவும், வரவும்விருந்த 8 விமானங்கள் ரத்து.!

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…

14 minutes ago

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…

16 minutes ago

“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!

வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…

42 minutes ago

என்ன நடந்தாலும் கூலா இருப்பாரு.., விஜய் பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்த மமிதா பைஜு.!

சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…

1 hour ago

டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம் : இளம் வீரர்களுக்கு டிப்ஸ் கொடுத்த சச்சின்.!

இங்கிலாந்து : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.…

1 hour ago

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…

15 hours ago