கடந்த 24 மணி நேரத்தில் தொற்று முன் எப்போதும் இல்லாத அளவாக 3 லட்சத்து 79 ஆயிரத்தை கடந்துள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை முன்பைவிட, இந்த இரண்டாவது அலையில் பாதிப்பு அதிகமாக கண்டறியப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் ஒரே நாளில், கடந்த 24 மணி நேரத்தில் 3,79,257 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,83,76,524 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,645 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை மட்டுமல்லாமல் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவைர கொரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை 2,01,187 லிருந்து 2,04,832 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,69,507 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், மொத்தம் வீடு திரும்புவார்கள் எண்ணிக்கை 1,48,17,371 லிருந்து 1,50,86,878 ஆக அதிகரித்துள்ளது என்பது மனஉறுதியை அளிக்கிறது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் விகிதம் 82.33% ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.12% ஆகவும் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30,84,814 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…