5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.
நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்த நிலையில், திட்டமிட்டபடி தேர்தல் நடத்துகிறது தேர்தல் ஆணையம்.
அதன்படி, உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் நிறைவடைய உள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியும், மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியும் நடக்கும் நிலையில், தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி 5 மாநிலங்களிலும் திட்டமிட்டபடி சட்டமன்ற தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…