மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட்.
பெகாசஸ் உளவு விவகாரத்தில் அமளியில் ஈடுபட்டதாக, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட் (இடை நீக்கம்) செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் அவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதனிடையே, இன்று மாநிலங்களவையில் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விசாரிக்கக்கோரி எதிரிக்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. அமளியை தொடரும் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்று அவைத் தலைவர் வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், மாநிலங்களவையை முடக்கும் எம்பிக்களின் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வெங்கையா நாயுடு எச்சரிக்கையை மீறி அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அமளி செய்ததால் தற்போது 6 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தோலா சென், நதிமுல் ஹக், அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், சாந்தா சேத்ரி, அர்பிதா கோஷ், மவுசம் நூர் ஆகிய 6 திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்பிக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…