[File Image]
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 23வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாள் சந்தீப் சக்சேனா மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடக அரசு முன்வைத்த கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரி அரசு சார்பில் தலைமை பொதுப்பணித்துறை பொறியாளர் பழனியப்பன் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார். காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் புதுச்சேரி, கேரளா, கர்நாடக மாநில அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த அவசர மனு மீது காவிரி மேலாண்மை ஆணையம் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க இயலாது என கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய அணைகளில் போதுமான நீர் இல்லாததால் தமிழகத்திற்கு நீர் திறப்பது இயலாத செயல். மழைப்பொழிவுக்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால் தமிழ்நாடு கேட்கும் அளவுக்கு தண்ணீர் தர இயலாது. தமிழ்நாடு கேட்கும் நீரை கொடுத்தால் பெரும் சிக்கல் ஏற்படும் என்றும், கர்நாடகத்தின் நான்கு முக்கிய அணைகளிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லை, 47 சதவீதம் அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு இருப்பதால் குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…